கொரோனா தொற்றினால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு பரீசீலிக்கப்பட்ட பகுதிகளில் சம்மாந்துறையும் உள்ளடங்கி இருந்ததாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய வருகிறது.
$ads={2}
கடல் மட்டத்தில் இருந்து தூரமான பகுதி மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதி என்ற அடிப்படையில் கொரொனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான பகுதியாக சம்மாந்துறையும் பரிசீலிக்கப்பட்டுள்ளது.
எனினும் இறுதியில் மன்னார் மாவட்டம் கொரோனாவால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு உகந்த பகுதியாக நிபுணர் குழுவொன்றினால் அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்தே அம்மாவட்டத்திலேயே நல்லடக்கம் செய்வதென்ற இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.
-ஜப்னா முஸ்லிம்
-ஜப்னா முஸ்லிம்