
மேலும் அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
$ads={2}
குறித்த அந்தப் பெண் நேற்றைய தினம் தனது கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தையுடன் IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அவர் தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார்.
கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிறப்புத் தேடலை மேற்கொண்டனர், பின்னர் அந்த பெண்ணை இன்று இரவு எஹெலியகொட பொலிஸ் பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.