சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளாகி இரண்டரை வயது குழந்தையுடன் தப்பியோடிய தாய் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சற்றுமுன் கொரோனா தொற்றுக்குள்ளாகி இரண்டரை வயது குழந்தையுடன் தப்பியோடிய தாய் கைது!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நேற்று (20) இரவு IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற 25 வயதான பெண்ணை எஹெலியகொட பகுதியில் வைத்து பொலிஸார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.


மேலும் அவரை மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அப்பகுதியின் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


$ads={2}


குறித்த அந்தப் பெண் நேற்றைய தினம் தனது கொரோனா பாதிக்கப்பட்ட குழந்தையுடன் IDH மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றிருந்தார். பின்னர் அவர் தனது குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியிருந்தார்.


கடந்த வியாழக்கிழமை இரவு முதல் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் சிறப்புத் தேடலை மேற்கொண்டனர், பின்னர் அந்த பெண்ணை இன்று இரவு எஹெலியகொட பொலிஸ் பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.