கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் தொடர் மாடிக்குடியிருப்புத் தொகுதிகளை அண்மித்த பகுதிகளில் இன்று (16) முதல் நடமாடும் இலவச கிளினிக் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, முதலாவது நடமாடும் சேவை, முகத்துவாரம் மெத்சத உயன தொடர்மாடி குடியிருப்புத் தொகுதியை அண்மித்து இன்று காலை 9.00 மணிக்கு மேற்கொள்ளப்படவுள்ளது.
முகத்துவாரம் மிஹிஜய செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து நாளை 17ஆம் திகதியும், முகத்துவாரம் ரன்மின செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து நாளை மறுதினம் 18ஆம் திகதியும், புளூ மென்டல் சிறிசந்த உயன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 19ஆம் திகதியும், மாளிகாவத்தை NHS குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 20ஆம் திகதியும், முகத்துவாரம் ரந்திய உயன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 21ஆம் திகதியும்,
புளூமெண்டல் சிறிமுத்து உயன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 23ஆம் திகதியும், தொட்டலங்க முவதொர உயன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 24ஆம் திகதியும், முகத்துவாரம் சிறிசந்த செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 25ஆம் திகதியும், முகத்துவாரம் ரன்முத்து செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 26ஆம் திகதியும், முகத்துவாரம் சக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 27ஆம் திகதியும், முகத்துவாரம் லக்ஹிரு செவன குடியிருப்புத் தொகுதியை அண்மித்து 28 ஆம் திகதியும், இந்த சேவைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த இலவச சேவைகள், மேற்கூறப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும், காலை 9.00 மணிக்கே இடம்பெறும் என கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷினி திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.