தொற்றா நோயால் பாதிகக்கப்பட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தொற்றா நோயால் பாதிகக்கப்பட்டவர்களுக்கான விசேட அறிவித்தல்!

தொற்றா நோய்களால் பீடிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்த நோய்கள் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தொற்று நோய் அல்லாத நோய்கள் தொடர்பான விசேட மருத்துவர் சம்பிகா விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.


$ads={2}

சுகாதார கல்வி பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அத்துடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தொற்றா நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் அது குறித்து பொது சுகாதார பரிசோதகர் அல்லது சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனிமைப்படுத்தப்படாது சாதாரணமாக வீட்டில் இருக்கும் நபருக்கு இப்படியான பாதிப்புகள் ஏற்பட்டதால், 1990 நோயாளர் காவு வண்டி சேவையின் ஊடாக வைத்தியசாலையில் அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


மேலும் சுகாதார கல்வி பணியகத்தின் 1999 மற்றும் 011-3422558 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் மருத்துவர் சம்பிகா விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.