
நாடாளுமன்றில் நேற்று (13) உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
கொரோனா வைரஸ் நெருக்கடி குறித்த விவாதம் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்றது.
இந்த விவாதத்துக்கு 2 மணிநேரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் மேலுமொரு மணித்தியாலம் வழங்குமாறு எதிர்க்கட்சியினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஆளுந்தரப்பு நிராகரித்தது.
இதன்போது எழுந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டபோதே ராஜித எம்.பி. மேற்கண்டவாறு குற்றஞ்சாட்டினார்.