
எங்கள் பக்கம் வாருங்கள், உங்களை மதிக்கின்றோம் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஆளும் கட்சியுடன் இணையுமாறு இராஜங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே அழைப்பு விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (13) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இதன்போது பேசிய அவர்,
சரத் பொன்சேகா முக்கியமான நபர், அவரை நாம் மதிக்கின்றோம். இராணுவத் தளபதியாக இருந்த போது கம்பீரமாக இருந்தார். இன்று அந்த பக்கம் சென்று பலவீனமடைந்துள்ளார்.
$ads={2}
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின் போது அவர் பாதுகாப்பு அமைச்சை எதிர்ப்பார்த்தார்.
ஆனால் அவருக்கு வன ஜீவராசிகள் அமைச்சு பதவியே வழங்கப்பட்டது. நிதி கூட உரிய வகையில் ஒதுக்கப்படவில்லை என்றார்.