பாடசாலைகள் மீள்திருப்பது தொடர்பான இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகள் மீள்திருப்பது தொடர்பான இறுதி தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல்!


கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இவ்வார இறுதியில் எடுக்கப்படும் என்று பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 


பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 09ஆம் திகதி ஆரம்பிக்கவிருந்தது. எனினும், இதுபற்றி விரிவாக ஆராய்ந்ததன் பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. மாணவர்களின் சுகாதார பாதுகாப்பிற்கு முக்கியத்துவமளித்து இத் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.


$ads={2}


இதேவேளை பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான விசேட பேச்சுவார்த்தை இணையவழி மூலம் இன்று நடைபெற்றது.


இந்த பேச்சுவார்த்தையில் கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


மேல் மகாணம் உள்ளிட்ட 118 பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும்.


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் பாடசாலை விடுமுறைக்கு பின்னர் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு எதிர்வரும் 09ஆம் திகதி திட்டமிடப்பட்டிருந்தது.


நாட்டின் நிலைமை தொடர்பில் இறுதி வரையில் கண்காணித்து அதற்கமைவாக எதிர்வரும் வார இறுதியில் நாட்டில் நிலவும் நிலைமையை கவனத்தில் கொண்டு பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டவிருப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.