தற்போது அமுலில் உள்ள சில மாவட்டங்களுக்கான தனிமைப்படுத்தல் ஊரடங்கினை நீக்கவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
குருநாகல் மாவட்டத்தில், குருநாகல் நகர சபை எல்லை மற்றும் குளியாபிட்டிய போலீஸ் பிரிவிற்கும், களுத்துறை மாவட்டத்தில் ஹொரணை பொலிஸ் பிரிவு, இன்கிரிய பொலிஸ் பிரிவு மற்றும் வேகடை கிராம உத்தியோகத்தர் பிரிவுக்கும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல மற்றும் மாவனெல்லை பொலிஸ் பிரிவிற்குமே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி தொடக்கம் மேல்குறிப்பிட்ட அனைத்து பகுதிகளிலும் தனிமைப்படுத்தல் உத்தரவு தளர்த்தப்படும்.