நாட்டினுள் இன்று (14) மாத்திரம் 389 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.
இவர்கள் யாவரும் ஏற்கனவே தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக உயர்ந்துள்ளது.
$ads={2}
மேலும் 5,206 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். அத்துடன் 11,324 பேர் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர்.
இதுவரை கொரோனா தொற்றினால் நாட்டில் 53 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.