பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரான்சில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை!

Embassy of Sri Lanka in France - Yazhnews
பிரான்ஸில் செயற்படும் இலங்கை தூதரகம் தமது செயற்பாடு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.


பிரான்ஸில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும் அமுலிலுள்ள உள்ளிருப்பு நடைமுறை காரணமாக, தமது தூதரக நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக பாரிஸில் செயற்படும் இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய நவம்பர் 13ஆம் திகதி முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான 14 நாட்களுக்கு தூதரகம் மூடப்பட்டிருக்கும்.


இந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்ட அனைத்து விண்ணப்ப அனுமதிகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கான புதிய திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.


$ads={2}


தூதரக சேவைகள் தொடர்புடைய அறிவுறுத்தல்களை பெற தூதரக வலைத்தளத்தை பார்வையிட முடியும்.


அவசர கொன்சுலர் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பான சேவைகளை தொலைபேசி இலக்கம் அல்லது குறுந்தகவல்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.