கம்பஹா மாவட்டத்தில் உள்ள களனி பொலிஸ் பிரிவு நாளை மறுதினம் (16) அதிகாலை 5.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்படும்.
இதற்கிடையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு, ஜா-எல, ராகமை, கடவத்தை, வத்தலை மற்றும் பேலியகொடை போன்ற பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு தொடர்ந்து அமுலில் இருக்கும் என ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
$ads={2}
மேலும் கம்பஹா மாவட்டத்தில் ஏனைய அனைத்து பகுதிகளிலும் விதிக்கப்பட்ட தனிமைபடுத்தல் நாளை (15) அதிகாலை 5.00 மணி முதல் நீக்கப்படும்.