இலங்கையில் மதரஸா பாடசாலைகளை அடியோடு அளிக்க வேண்டும்! நாடாளுமன்றில் விமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் மதரஸா பாடசாலைகளை அடியோடு அளிக்க வேண்டும்! நாடாளுமன்றில் விமல்!


இலங்கையில் இயங்கிவரும் அனைத்து மதரஸா பாடசாலைகளை இழுத்துமூட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்ச மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.


நாடாளுமன்றில் இன்று (23) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.


அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


இந்த நாட்டில் இனவாதப் பிரிவுகளை அடியோடு அழிக்கவே 69 லட்சம் மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மதரஸா பாடசாலைகள் என்ற பெயரில் தீவிரவாதத்தை தீண்போட்டு வளர்த்திருப்பது ஆணைக்குழு விசாரணைகளில் இருந்து அம்பலமாகியிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


$ads={2}


எவ்வாறாயினும் கடந்த வாரம் நடந்த நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், மதரஸா பாடசாலைகளை கல்வி அமைச்சின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.