அண்மையில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்ததாக கூறப்படும் நீதி அமைச்சர் அலி சப்ரியின் உறவினரான பெண்ணொருவர் அடக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் குறித்த பெண் கொரோனாவால் மரணித்து அடக்கம் செய்யப்பட்டார் என்ற கூற்றுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (23) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சப்ரி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், நீதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை இராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.
$ads={2}
இது தொடர்பாக எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.