முஸ்லிம்களின் ஜனாஸாவை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய பிரதமர் முயற்சி!! முஸ்லீம் சமய விவகார இணைப்புச் செயலாளர் தெரிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முஸ்லிம்களின் ஜனாஸாவை தகனம் செய்யாமல் அடக்கம் செய்ய பிரதமர் முயற்சி!! முஸ்லீம் சமய விவகார இணைப்புச் செயலாளர் தெரிவிப்பு!


கொரோனா தொற்றினால் மரணம் அடைந்த உடல்களைத் தகனம் செய்வது தொடர்பில் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் முஸ்லிம்களுகடைய உடல் தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை  முன்னெடுக்கவுள்ளதாக என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் சமய விவகாரத்திற்கான இணைப்புச் செயலாளரும் மற்றும் குருநாகல் மாவட்டத்தின் பிரதமரின் இணைப்பதிகாரியுமான அப்துல் சத்தார் தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


இலங்கையில் சுகாதார அதிகாரிகள் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கவே அரசாங்கம் முழு நாட்டினுடைய மக்களுடைய பாதுகாப்பை கருத்திற்கொண்டு உடல் தகனம் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது. 


அதற்கமைய தற்போது கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களுடைய  தகனம் செய்யப்பட்டு வருகின்றன. எனினும் முஸ்லிம்கள் இந்த  உடல் தகனம் செய்யும் விடயத்தில் அதிருப்தியை கொண்டுள்ளனர். இது தொடர்பில் முஸ்லிம் சமூக அமைப்புக்கள் என்னிடம் முறைப்பாடுகளை முன் வைத்திருந்தார்கள். 


$ads={2}


இந்த விடயம் தொடர்பில்  நான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கருத்தினைப் பகிர்ந்து கொண்ட போது அவர் குறித்த வைத்திய நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க பிரதமர் அவர்கள் முஸ்லிம்களுகடைய உடல் தகனம் செய்யாமல் புதைப்பதற்கான முயற்சிகளை  முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார். 


அதே போன்று அமைச்சர் அலி சப்ரி அவர்கள் அமைச்சரவைக் குழுவில் இவ்விடயம் தொடர்பில் சிறந்த முடிவுவினைப் பெற்றுக் கொள்வதற்காக அமைச்சரப் பத்திரத்திரம் ஒன்றை இன்று அல்லது நாளை சமர்ப்பிக்கவுள்ளார். yazhnews


அதேவேளை, அமைச்சரும் பாராளுமன்ற கொரோடாவானமான ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களிடம் இது தொடர்பில் அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பிக்கவுள்ள அமைச்சரவை பத்தரிரத்திற்கு ஆளும் தரப்பு அமைச்சர்களுடைய ஆதரவைப் பெற்றுத் தருமாறு வேண்டிக் கொண்டாதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


-இக்பால் அலி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.