கிழக்கு மாகாணத்தின் மேலும் சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என்.பி.ஏ. நிசாம் அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த கல்வி வலயப் பாடசாலைகள் ஒரு வார காலத்திற்கு மூடப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, கல்முனை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை, திருக்கோவில் ஆகிய கல்வி வலயங்களின் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.