அக்கறைப்பற்றில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அக்கறைப்பற்றில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு!!

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று (26) மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

இத்தகவலை ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன் சற்று முன்னர் உறுதிப்படுத்துயுள்ளார்.

இதனடிப்படையில் ஆலையடி வேம்பு பிரதேசத்தில் வாழும் மக்கள் தேவையற்ற விதத்தில் வெளியேறுவதைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேநேரம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அக்கரைப்பற்று மத்திய சந்தைப் பிரதேசத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையின் பின்னர் 10 பேர் கொரோனா தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று மத்திய சந்தை பிரதேசத்தில் மேலும் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.