ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் விசாரணைக்குழு தொடுத்த கேள்விகளும் அதற்கு ரிஷாத் பதியுதீன் அளித்த பதில்களும் கீழ்வருமாறு,
கேள்வி: துருக்கியில் தடைசெய்யப்பட்ட FETO என்ற அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட்டமை குறித்த விசாரணைகளில் தலையிட்டீர்களா?
பதில்: அந்த குற்றச்சாட்டு உண்மையில்லை தனக்கு அந்த அமைப்பை சேர்ந்தவர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லை. மேலும் விசாரணைகளில் தான் தலையிடவுமில்லை.
கேள்வி: கனடாவில் உள்ள உங்கள் சகோதரியின் வீட்டினை தற்கொலை குண்டுதாரிகள் பயன்படுத்தியமை குறித்து அறிந்திருக்கின்றீர்களா?
பதில்: அதனை நான் அறிந்திருக்கவில்லை. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னரே அதனை அறிந்துகொண்டேன். மேலும் குறித்த வீட்டிற்கு நான் ஒருபொழுதும் விஜயம் மேற்கொள்ளவில்லை.
கேள்வி: உங்கள் தம்பி எப்போதாவது கைது செய்யப்பட்டாரா?
பதில்: ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார். சினமன் கிரான்டில் தாக்குதலை மேற்கொண்டவர் எனது சகோதரரிற்கு ஏழு தொலைபேசி அழைப்புகளை விடுத்துள்ளார் என்பதை ஊடகங்கள் மூலமே அறிந்தேன்.
$ads={2}
அதன்பின்னர் நான் எனது சகோதரரிடம் இன்சாப் இனை ஏன் அவர் தொடர்பு கொண்டார் என வினவியபோது அரசாங்கம் செப்பு ஏற்றுமதியை இரத்து செய்தமையால் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்தே பேச்சுக்களை மேற்கொண்டதாக எனது சகோதாரர் தெரிவித்தார்.
கேள்வி: நீங்கள் மறைமுகமாக இன்சாப் சகோதரர்களுக்கு ஆதரவளித்துள்ளீர்களா?
பதில்: நான் இந்த குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கின்றேன். இன்சாப் சகோதரர்களுக்கு நான் எவ்விதத்திலும் உதவவேயில்லை.
கேள்வி: விடுதலைப்புலிகள் வடக்கிலிருந்து வெளியேற்றிய பின்னர் ஐந்து வருடங்கள் முகாமில் அகதியாக வாழ்ந்ததாக தெரிவிக்கின்றீர்கள், நீங்கள் எப்படி அரசியலிற்கு வந்தீர்கள்? செல்வந்தராக மாறினீர்கள்?
பதில்: நான் அகதியாகி விட்டதால் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமிருக்கவில்லை, என்னால் வர்த்தகத்தில் ஈடுபட முடியும்.
கேள்வி: நீங்கள் உங்கள் அமைச்சு பதவிகளை பயன்படுத்தி இவ்வளவு சொத்தினை சேர்த்தீர்களா? உங்கள் குடும்பத்தினையும் வர்த்தகத்தினையும் முன்னேற்றினீர்களா?
பதில்: நான் எந்த வர்த்தகத்தினை முன்னேற்றுவதற்கு எனது அமைச்சு பதவியை பயன்படுத்தவில்லை. என தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.