நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்க முடியாவிட்டால், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை போன்று எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
$ads={2}
இந்நிலையில், மேலும் இரண்டு வாரங்களில் பாடசாலைகளைத் திறப்பதில் சிரமம் இருந்தால், அந்தப் பரீட்சையை ஒத்திவைக்க நாம் தயக்கத்துடன் அல்லது விருப்பமின்றி ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். இதுவரையில் இதுதொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு முடிவை வேண்டும் என்று நம்புகிறேன்.
பாடசாலைகளை மீள ஆரம்பித்தாலும் உடனடியாக விளையாட்டு செயற்பாடுகள் எதனையும் தொடங்க வேண்டாம் என சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.