க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாத்துவதில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தர பரீட்சை நடாத்துவதில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு!


நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் மீண்டும் திறக்க முடியாவிட்டால், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை  ஒத்திவைக்க நேரிடும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதை போன்று எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை என்றே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.  


$ads={2}


இந்நிலையில், மேலும்  இரண்டு வாரங்களில் பாடசாலைகளைத் திறப்பதில் சிரமம் இருந்தால், அந்தப் பரீட்சையை ஒத்திவைக்க நாம் தயக்கத்துடன் அல்லது விருப்பமின்றி ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். இதுவரையில் இதுதொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. மேலும் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு முடிவை வேண்டும் என்று நம்புகிறேன். 


பாடசாலைகளை மீள ஆரம்பித்தாலும் உடனடியாக விளையாட்டு செயற்பாடுகள் எதனையும் தொடங்க வேண்டாம் என சுகாதார நிபுணர்களும் அறிவுறுத்தியுள்ளனர் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.