ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருக்குமானால் 0771 056 032 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் எந்தவொரு போக்குவரத்தையும் பயன்படுத்தி பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளிக்க முடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
$ads={1}
மேலும், பரீட்சை நிலையங்களுக்கு வருகை தரும் அதிகாரிகளுக்கும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.