இன்று (01) மாலை இலங்கையில் அறிவிக்கப்பட்ட 21ஆவது கொரோனாவின் மரணம் இப்போது சமூக ஊடகங்களில் சர்ச்சைக்குரிய விடயமாக மாறியுள்ளது.
நாட்டில் 22ஆவது கொரோனா மரணம் என சிலர் இதை விளக்க முயற்சிக்கின்றனர்.
கம்பஹா மேயர் எரங்கன சேனாநாயக்க தனது பேஸ்புக் கணக்கில் ஏற்கனவே அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிட்ட 21ஆவது கொரோனா மரணத்தை, வீட்டில் இறந்ததாக தெரிவித்திருந்தார். ஆனால் அரசாங்க தகவல் திணைக்களத்தின் செய்தியில் இறந்தவர் வைத்தியசாலையில் இறந்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
$ads={1}
ஆகையால், 21ஆவது கொரோனா மரணத்தை இரண்டு மரணங்கள் என்று விளக்கி சிலர் 22ஆவது மரணம் என உருவாக்க முயற்சிக்கின்றனர்.
$ads={2}
இது குறித்து கம்பஹா மேயரிடம் ஓர் சிங்கள ஊடகம் விசாரித்தபோது, இந்த இரண்டு மரணங்களும் ஒன்று எனக் கூறி விளக்கமளித்தார். யாழ் நியூஸ்