பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் பலி! வவுனியாவில் சம்பவம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் பலி! வவுனியாவில் சம்பவம்!


வவுனியாவில் பன்றி இறைச்சி சாப்பிட்ட சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொது வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


சம்பவத்தில் வவுனியா - செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பெரிய தம்பனையை சேர்ந்த சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,


கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெரியபண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் மூச்சு திணறிய நிலையில் சிறுவன் ஒருவன் அவசரமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இதனையடுத்து மன்னார் பொது வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் வைத்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்ட நிலையில் சிறுவன் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.


இந்நிலையில் குறித்த சிறுவன் நேற்றைய தினம் (26) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


இதேவேளை பன்றி இறைச்சி சாப்பிட்டதால் தான் மூச்சு திணறல் ஏற்பட்டது என குடும்பத்தினரால் சொல்லப்பட்ட நிலையில், குறித்த சிறுவன் விஷம் அருந்தியுள்ளார் என்ற தகவல்களும் கசிந்துள்ளது.


எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை கிடைக்கப்பெற்ற பின்னரே சிறுவன் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.