சர்வதேச அழுத்தங்களையும் மிஞ்சி ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தில் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -ஏ.எச்.எம் ஹலீம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சர்வதேச அழுத்தங்களையும் மிஞ்சி ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தில் அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்! -ஏ.எச்.எம் ஹலீம்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விடயத்தை மீள்பரிசீலனை செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்ட கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அப்துல் ஹலீம், இவ்விடயத்தில் சர்வதேச அழுத்தத்தையும் கருத்தில் கொள்ளுமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.


முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விடயம் தொடர்பாக தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ஹலீம், இவ்விடயத்தில் அரசாங்கம் சகல வேறுபாடுகளையும் மறந்து முஸ்லிம் மக்களின் இஸ்லாமிய நெறிமுறைகளை மதித்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு ஆவணம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.


"முஸ்லிம் மக்கள் வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கக் கூட அஞ்சுகின்றனர். இவ்வாறான நிலைமையை இல்லாமல் செய்ய அரசாங்கம் சிறந்ததொரு தீர்வை காண முன்வர வேண்டும். 


$ads={2}


ஜனாஸா எரிப்பு விடயத்தில் வெளிநாட்டு அரசாங்கங்கள் அழுத்தம் கொடுத்தும் கூட அதனைப் பொருட்படுத்தாது அரசாங்கம் செயற்படுகின்றது. வெவ்வேறு கலாசாரங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும் இந்நாட்டில் மதங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்." எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.