தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நபர்களுடன் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து, நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேர் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் பதிவாகியுள்ளது.
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த வீடொன்றுக்கு முன்னால் பிறிதொரு குழு விளையாடிக் கொண்டிருந்ததாகவும், இதனையடுத்து இது தொடர்பில் குறித்த வீட்டு உரிமையாளரால் சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
இதனையடுத்து, தனிமைப்படுத்தப்பட்டிருந்த வீட்டு உறுப்பினர்களுடன் குறித்த குழு தகராறில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்ட ஐந்து நபர்களை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.