வெளிநாட்டு யாத்திரிகர்கள் புனித உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் கடந்த 7 மாதங்களில் முதல் தடவையாக வெளிநாட்டவர்கள் உம்ரா யாத்திரை மேற்கொள்ள இன்று (01) அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சுமார் 10,000 பேர் உம்ரா யாத்திரைக்காக சவூதி அரேபியாவுக்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
ஹஜ் மற்றும் உம்ரா விவகார பிரதி அமைச்சர் கலாநிதி அம்ர் அல் மதாஹ், இது தொடர்பாக கூறுகையில் “வெளிநாட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து வரும் யாத்திரிகர்கள் முதலில் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டும். சவூதி அரேபியாவுக்கு வந்தவுடன் அவர்கள் மூன்று தினங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.