மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான ஊடக அறிக்கையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை ஆரம்பிப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

$ads={2}

மீள வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் போது ஏற்படக்கூடிய நெரிசலை தடுப்பதற்காக வருமான அனுமதி பத்திரம் விநியோகிக்கும் பணி இடைநிறுத்தப்பட்ட 2020 ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 2020 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரையிலும் தண்டப்பணமின்றி வாகன வருமான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தயவுடன் அறியத்தருகின்றோம். 

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.