க.பொ.த சாதாரண தர பரீட்சை தினம் குறித்த மீள் பரிசீலனை!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

க.பொ.த சாதாரண தர பரீட்சை தினம் குறித்த மீள் பரிசீலனை!!

க.பொ.த சாதாரண தர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நடைபெறும் தினத்தை நாம் அறிவித்திருந்தோம். அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறவுள்ளது.

தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பிரச்சினைகள் உண்டு. இதேபோன்று தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானங்களை 2 வார காலத்துக்குள் மேற்கொள்வோம்.

$ads={2}

பின்னர் தரம் 10 தொடக்கம் 11 வரை வகுப்புக்களை ஆரம்பிக்க முடியாதாயின், மீண்டும் இது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும். 

அதனடிப்படையில், கல்வி க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான பரீட்சையை இந்த பாடசாலைகளில் நடத்த முடியுமா என்ற தீர்மானம் 2 வார காலப்பகுதிக்குள் மேற்கொள்ளப்படும்.

மேலும் க.பொ.த சாதாரண தர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா? என்பது குறித்தும் அதாவது, பரீட்சையை நடத்துவது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். 

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.