PHOTOS : தனிமைப்படுத்தலுக்காக மக்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PHOTOS : தனிமைப்படுத்தலுக்காக மக்களை அழைத்துச் சென்ற பஸ் விபத்து!


யாழ்.விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 25 பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளது.

சாரதி தூக்க மயக்கத்தில் இருந்தமையால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி நீர் விநியோக குழாய் மீது மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


$ads={2}


இச்சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்துள்ள 3 பேர் உடனடியாக அம்பியூலன்ஸ் வண்டி மூலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஓமான் நாட்டிலிருந்து நாடு திரும்பிய 254 பேர் தனிமைப்படுத்தலுக்காக விடத்தல் பளை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு 11 பஸ்களில் அழைத்துவரப்பட்ட நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் சுகாதார பிரிவினர் மற்றும் படையினர், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.







Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.