கொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை! மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரொனா என எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் இரு உடல்கள் தற்போது கொரொனா இல்லை என அறிக்கை! மனித உரிமைகள் ஆணைக்குழு கண்டனம்!!

கொரோனா வைரஸால் இறப்பவர்களின் உடலங்களை தகனம் செய்வது என்ற ஏற்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அல்லது சந்தேகத்தில் இருக்கும் ஒருவர் இறந்தால், அவரின் உடலை தகனம் செய்யவேண்டியது அவசிமற்றது. இதனை பொது சுகாதாரத்துக்கு காரணமாக கூறமுடியாது. எனவே மத நம்பிக்கைகளுக்கு இந்த விடயத்தில் தடை ஏற்படுத்துவதை ஏற்கமுடியாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சாட்சியப்பதிவுகள் முடிவடைவதற்கு முன்னரே உடலங்கள் அகற்றப்பட்டு தகனம் செய்யப்படுகின்றமை மற்றும் பாதுகாப்பு ஒழுங்குகளின் அடிப்படையில் இறுதி கிரியைகளுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமை என்பன உரிமை மீறல்களாகும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

2020 நவம்பர் 09ஆம் திகதி வரை கொரோனாவினால் ஏற்பட்ட மரணத்தின் அடிப்படையில் 35 தகனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 17 தகனங்கள் முஸ்லிம் மக்களுடைய உடலங்கள் தொடர்பில் இடம்பெற்றுள்ளது. சில சந்தர்ப்பங்களில் வீடுகளில் ஏற்பட்ட மரண சம்பவத்தின் போது ஜனாஸாக்கள் வீடுகளில் இருந்து பலாத்காரமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

$ads={2}

சில நேரங்களில் இறந்து போனவர்களின் உடலங்களில் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை என முறைப்பாடு கிடைத்துள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

சிலவேளைகளில் இறந்த பின்னர் 72 மணித்தியாலங்களிலேயே PCR பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன. 

இந்த வகையில் கொரோனாவினால் ஏற்பட்ட மரணம் எனக்கூறி தகனம் செய்யப்பட்ட இரண்டு முஸ்லிம்களின் பெயர்கள் தற்போது கொரோனா மரண பட்டியலில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.