நாட்டு சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டு சட்டத்தை லொஸ்லியாவுக்காக திருத்தியமைக்க முடியாது - நாமல்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டு மக்களின் மனதை கவர்ந்த லாஸ்லியாவின் தந்தை கடந்த வாரத்திற்கு முன்னர் மாரடைப்பால் கனடாவில் திடீர் என உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் லொஸ்லியா தற்போது இலங்கை வந்தடைந்துள்ள நிலையில் விடுதியொன்றில் தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார், இன்னும் சில தினங்களில் அவர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒரு புறமிருக்க இலங்கை வந்துள்ள லொஸ்லியா தனிமைப்படுத்தலுக்குள்ளாகமால் திருகோணமலை செல்வதற்கு அவரது நண்பர்கள் இலங்கையின் சில முக்கிய பிரமுகர்களுடன் பேசியதாக இந்திய ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டிருந்த நிலையில் , தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளன.


$ads={2}


அந்த வகையில் லொஸ்லியாவின் நண்பரொருவர் அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் லொஸ்லியா தனிமைப்படுத்தலுக்குள்ளாகமால் திருகோணமலை செல்வதற்கு அனுமதி எடுத்து தருமாறு கேட்டுக்கொண்டதாக கூறப்படுகின்றது.

அதற்கு நாமல் தரப்பு லொஸ்லியாவிற்காக இலங்கையின் சட்டத்தை மாற்றமுடியாதென பதிலளித்ததாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.