மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோரின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மஹர சிறைச்சாலை கலவரம்; பலியானோரின் எண்ணிக்கை 06 ஆக உயர்வு!

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்ட நிலையில் 06 கைதிகள் உயிரிழந்ததுடன் 37 பேர் படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 06 சடலங்கள் ராகம வைத்தியசாலையால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த மோதில் படுகாயமடைந்த 37 பேர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து சிறைச்சாலைக்குள் பாரிய தீ ஏற்பட்ட போதிலும், தீ அணைப்புப் படைகளின் உதவியுடன் நேற்று நள்ளிரவுக்கு மேல் அது அணைக்கப்பட்டது.

$ads={2}

இந்த மோதல் சம்பவத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை செய்வதற்காக விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.