ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனியவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பாத்திமா ஹாதியாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் வெலிக்கடை சிறையிலிருந்து வெலிகந்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதன் பின்னனியில் இத்தகைய முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்படும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிறைச்சாலைகள் திணைக்களம் முழுமையாக முயற்சிக்கும் என நம்புவதாக சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு, ஹாதியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உறுதியான பாதுகாப்பு கட்டமைப்பு ஒன்றை நடைமுறைப்படுத்து தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஹாதியாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக செயற்படும் அதிகாரி உள்ளிட்டோரின் விபரங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.