இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் அவதானம் செலுத்தி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அண்மைய நாட்களில் வீட்டில் மரணிக்கின்ற முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகளுக்கு மேற்கொள்ளப்படுகின்ற PCR பரிசோதனைகளில் சிலருக்கு கொரொனா தொற்று இருக்கின்றமை தெரியவந்தது.
இந்நிலையில், அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ள முதியவர்கள் மற்றும் நெடுநாள் நோயாளிகள் உடனடியாக வைத்தியசாலைக்கு செல்வதன் மூலம் அவர்களது நலன்தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.