நாளை நாடாளுமன்றத்தில் பசில்? அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாளை நாடாளுமன்றத்தில் பசில்? அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பதவி!!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வரவுள்ளார் எனவும், அவருக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனவும் தெரியவருகின்றது.

பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

$ads={1}

நாளை (03) அல்லது எதிர்வரும் 12 ஆம் திகதி பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான தடை 20ஆவது 
திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையிலேயே பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகிறார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.