பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருவதற்காக மொட்டு கட்சியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜயந்த கெட்டகொட எம்.பி. பதவியை துறக்கவுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாளை (03) அல்லது எதிர்வரும் 12 ஆம் திகதி பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் எனவும் நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜாவுரிமைகொண்ட நபரொருவர் தேர்தலில் போட்டியிட முடியாது. இந்நிலையில் இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கான தடை 20ஆவது
திருத்தத்தில் நீக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையிலேயே பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றம் வருகிறார் எனவும், அவருக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.