ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறி, துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறி, துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்!!

பொலிஸ் நிலையப் பொறுப்புதிகாரி உள்ளிட்ட ஒன்பது பேரை கொலை செய்யப் போவதாக கூறிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அதிகாரபூர்வ ஆயுதத்துடன் தலைமறைவாகியுள்ளார்.


இரத்தினபுரி – குருவிட்ட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு தலைமறைவாகியுள்ளார்.


நேற்று முன்தினம் சிரிபாகம பிரதேசத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் ஆயுதத்துடன் தலைமறைவாகியுள்ளார்.


$ads={2}


இவ்வாறு ஆயுதத்தை எடுத்துச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் குருணாகல் பிரதேசத்திற்கு ஆயுதத்தையும் எடுத்துச் சென்று தனது உறவினர்களிடம் ஒன்பது பேரை கொலை செய்யப்போவதாக கூறியுள்ளார்.


இந்த ஒன்பது பேரில் குருவிட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் நாட்டின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நபரை கைது செய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.