அவரின் தாய் மகரகமையில் உள்ள மீன் சந்தை கடை ஒன்றில் மீன்வாங்கியிருந்த நிலையில் அந்த கடை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி உள்ளனர்.
$ads={2}
பின்னர் அவர் வீட்டில் இருக்கும் போது கொரோனாவிற்குரிய அறிகுறிகளை காண்பித்துள்ளார். இதனால் நேற்றைய முன்தினம் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாயை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதால் மன உளைச்சலுக்குள்ளான மகன் நேற்று (31) காலை அப்பகுதியில் வசிப்பவர்களால் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக அயலவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விஷேட தேவை கொண்ட மகனை தனது தாயுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் இதுபோன்ற ஒரு துன்பகரமான சம்பவம் நடந்திருக்காது என்று அப்பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.