நாட்டில் இதுவரை கர்ப்பிணிப்பெண்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் குடும்பநல பணியகத்தின் வைத்திய அதிகாரி வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்களுள் சிலர் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்திருந்த நிலையில் குழந்தைகள் கொரேனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
$ads={2}
இதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் உள்ள கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான கிளினிக் சேவைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.