கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1.4 மில்லியன் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் கிட்டத்தட்ட 7 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கொரோனா நெருக்கடியால் பொதுமக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் அனைத்து அபிவிருத்தியையும் மேற்கொண்டு வருவதாகவும் அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
$ads={2}
தற்போது, நாட்டின் அனைத்து துறைகளும் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.