அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,723 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள 12,970 பேரில் 5,217 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
அத்தோடு 467 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளதுடன் கொரோனா தொற்றினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.