அரசுக்கு எதிரான சுமார் 200 ஊடகவியலாளர்களை கைது செய்யத் திட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அரசுக்கு எதிரான சுமார் 200 ஊடகவியலாளர்களை கைது செய்யத் திட்டம்!


அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கும் சுமார் 200 ஊடகவியலாளர்களை கைது செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாகீர் மார்க்கார் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தினை விமர்சனம் செய்து செய்தி அறிக்கையிடும் ஊடகவியலாளர்கள் தொடர்பிலான பட்டியல் ஒன்றை அரசாங்கம் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறான சில ஊடகவியலாளர்கள் கைது செய்யபட்டுள்ளதாகவும் அவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இளவயதில் மனித உரிமைகளுக்காக சர்வதேச சமூகம் வரையில் சென்று போராடியவர் எனவும், தற்பொழுது இவ்வாறான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்வது ஏற்புடைதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


$ads={2}


ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் உள்ளடக்கம் பிரிவிணைவாத அடிப்படையிலானது எனவும், அதிகாரத்தில் நீடிப்பதற்காக இவ்வாறான அணுகுமுறைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் இவ்வாறான அணுகுமுறைகளினால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.