அனுராதபுர மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 37 நீர்த்தேக்கங்களில் கிட்டத்தட்ட 18 மில்லியன் விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகளை அரசாங்கம் விடுவிக்கவுள்ளது.
அலங்கார மீன், நன்னீர் மீன் மற்றும் இறால் ஆகிய விரலளவு பருமன் கொண்ட மீன் குஞ்சுகள் இதில் அடங்கும் என அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார்.
$ads={2}
நேற்று (09) அனுராதபுரத்தில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சி குறித்து நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.