பொலிஸாரின் சமிக்கையை மீறிச்சென்ற 17 வயது மாணவன்; தூக்கிலிட்டு தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பொலிஸாரின் சமிக்கையை மீறிச்சென்ற 17 வயது மாணவன்; தூக்கிலிட்டு தற்கொலை!


காலி, பிடிகல-பொரவகம பகுதியில் வசித்து வந்த 17 வயது பாடசாலை மாணவர் ஒருவர் அவரது வீட்டு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


கடந்த 11ஆம் திகதி இரவு தனது நண்பருடன் தல்கசவல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பணித்துக்கொண்டிருந்த போது  மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிஸார் இவர்களுக்கு சைகை காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும், பொலிஸாரின் சமிக்ஞைகளை அலட்சியப்படுத்திவிட்டு இவர்கள் இருவரும் பயணித்துள்ளனர்.


இதனைடுத்து, குறித்த  மோட்டார் சைக்கிளின் உரிமையாளரை பொலிஸார் கண்டு பிடித்துள்ளதையடுத்து மேற்படி மாணவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


$ads={2}


இதன்போது மாணவரின் தாயும் அந்த சந்தர்ப்பத்தில் காவல் நிலையத்திற்கு வந்திருந்ததோடு குறித்த மாணவரை கடுமையாக திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இந்த அவமானம் மற்றும் அச்சமே குறித்த தற்கொலை சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.


தற்போது உயிரிழந்த மாணவரின் பிரேத பரிசோதனைகள் எல்பிடிய மருத்துமனையில் இடம்பெறவுள்ளதோடு, சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.