இலங்கையில் இன்றைய தினம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் உயிர் பலியாகியுள்ளனர்.
1. கொழும்பு 13 ஜிந்துப்பிட்டிய பகுதியை சேர்ந்த 54 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்.
2. கொழும்பு 15 பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதான ஆண். கொரோனா தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதி. சிகிச்சை பலனின்றி பலி.
3. கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 88 வயதான ஆண். நெஞ்சுவலி காரணமாக கொழுப்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழப்பு. பின்னர் கொரோனா தொற்றுக்கு அடையாளம்.
4. கொழும்பு 08 பொரளை பகுதியை சேர்ந்த 79 வயது ஆண். வீட்டில் இருந்த நிலையில் மரணம்.
5. கொழும்பு 13 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பலி.
அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
$ads={2}