கொழும்பிலிருந்து 11 ஆம் திகதி கம்பளை வந்தவருக்கு கொரோனா உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பிலிருந்து 11 ஆம் திகதி கம்பளை வந்தவருக்கு கொரோனா உறுதி!

கொழும்பிலிருந்து கம்பளை, புப்புரஸ்ஸ மணிக்கட்டி தோட்டத்தின் எச்.எம். பிரிவுக்குவந்த பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


$ads={2}

கொழும்பு, கிருளப்பனை பகுதியில் தொழில் செய்த குறித்த பெண் கடந்த 11 ஆம் திகதி தனது வீட்டுக்கு வந்துள்ளார். எனினும், கிருளப்பனை பகுதியில் அவருடன் தங்கியிருந்த சிலருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

இது தொடர்பில் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் மணிக்கட்டி தோட்டத்துக்கு வந்த குறித்த பெண் தனிமைப்படுத்தப்பட்டார். 26 ஆம் திகதி அவரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பிரசோதனை முடிவுகள் 27 ஆம் திகதி வெளியானது. அதில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிசிஆர் பரிசோதனையும் நடத்தப்படவுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.