இன்றைய தினம் கொரோனா வைரஸால் மேலும் நால்வர் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது
1 - 51 வயதான ஆண்; இராஜகிரியாவில் ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர். 07.11.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணித்துள்ளார்.
2- கொழும்பு 10ஐ சேர்ந்த 45 வயதான ஆண்; அவர் 23.10.2020 அன்று கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மருத்துவமனையில் மரணித்துள்ளார்.
3 - கம்பஹாவில் உள்ள உடுகம்பல பகுதியில் வசித்த 63 வயது பெண்; 09.11.2020 அன்று கம்பஹா மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணித்துள்ளார்.
4 - 55-60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்; 08.11.2020 அன்று பிரேத பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டது.
$ads={2}
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா மரணத்தின் மொத்த எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது.