நேற்றைய தினம் 04 கொரோனா மரணங்கள்; அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை! ஹரின் குற்றச்சாட்டு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்றைய தினம் 04 கொரோனா மரணங்கள்; அரசு கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை! ஹரின் குற்றச்சாட்டு!


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கம் மறைப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.


இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள எம்.பி ஹரின் பெர்ணான்டோ, நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில் இந்த தொற்றுநோய் சூழ்நிலையில் மக்கள் முகங்கொடுத்த பிரச்சினைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு ஒரு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது என தெரிவித்தார்.


நேற்று இரவு மாத்திரம் இராஜகிரிய, கம்பாஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில் மொத்தம் 04 மரணங்கள் பதிவாகியிருந்தது என்றும் எனினும் இது தொடர்பாக அறிவிக்கபடவோ மொத்த இறந்தோரின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவோ இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.


$ads={2}


இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரண சான்றிதழ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு என்றும் அதில் இறப்புக்கு கொரோனா வைரஸே காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.


இதன்மூலம் நாட்டை கொரோனா வைரஸில் இருந்து காப்பதற்கான முயற்சியை அரசாங்கம் கைவிட்டுள்ளது என்பது தென்படுவதாகவும், இது நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும் என்றும் அவர் தெரிவித்தார்.


இலங்கையின் முதலாவது கொரோனா வைரஸ் நெருக்கடியின்போது கொரோனாவை கட்டுப்படுத்திய வெற்றியாளர் கிண்ணத்தை, ஜனாதிபதி சுவீகரித்தார் என்றும் எனினும் இந்த வைரஸ் தொடர்பாக உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற நிலையில், இரண்டாவது அலை அபாயத்தின் போது இலங்கை அரசாங்கம் அதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.