PMD கடிதத் தலைப்பினை பயன்படுத்தி போலியான செய்தி பரப்பிய இளைஞன் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PMD கடிதத் தலைப்பினை பயன்படுத்தி போலியான செய்தி பரப்பிய இளைஞன் கைது!


ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய 18 வயது இளைஞனை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


$ads={2}


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.