![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhrZrqkhEkC79CJCg_xSNBpXRi_ekMMDFlNu7yXPs-G-rOduX__Kl6wWOuF1pl3YEm1-B-IxwVcTlPkPOWYVJxwmQ3LZAxOKtjpGjK8a1VdH5ybUCPf6rBsJs8Cmwrd8rHEiJZdOCPwtAY/s16000/PMD+news+yazh+news.jpg)
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் (PMD) கடிதத் தலைப்பை பயன்படுத்தி சமூக வலைத்தளங்களில் ஊரடங்கு சட்டம் தொடர்பில் வதந்திகளை பரப்பிய 18 வயது இளைஞனை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரின் சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் நேற்று (08) கைது செய்யப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
$ads={2}