PCR பரிசோதனை செய்யும் அதிகாரிகளை விரட்டிய மீனவருக்கு விளக்கமறியல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

PCR பரிசோதனை செய்யும் அதிகாரிகளை விரட்டிய மீனவருக்கு விளக்கமறியல்!


காலியில் மீனவர்களுக்கு PCR பரிசோதனை நடத்தும் போது மருத்துவர்கள் உட்பட சுகாதார அதிகாரிகளுக்கு தடைகளை ஏற்படுத்திய மீனவர் ஒருவரை நாளை மறுதினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் ஹர்சன கெக்குனுவல இன்று உத்தரவிட்டுள்ளார்.


அத்துடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மீனவரின் மனநலம் தொடர்பான மருத்துவப் பரிசோதனையை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


$ads={2}


காலி, சீன கொரட்டுவ பிரதேசத்தை சேர்ந்த மீன் வியாபாரி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


காலியில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு PCR பரிசோதனை நடத்துவதற்காக நேற்றைய தினம் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன.


அப்போது அந்த இடத்திற்கு சென்ற இந்த நபர், பரிசோதனைகளுக்கான மாதிரிகளை பெற்றுக்கொண்டிருந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட அதிகாரிகளை விரட்டியுள்ளார். பரிசோதனைக்காக மாதிரிகளை வழங்கிக் கொண்டிருந்தவர்களையும் விமர்சித்துள்ளார்.


இதனையடுத்து தமது சுகாதார அணியினரின் பணிகளுக்கு தடையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி கடமையில் ஈடுபட்டிருந்த சுகாதார வைத்திய அதிகாரி காலி தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதுடன், அங்கு சென்ற பொலிஸார் அந்த நபரை கைது செய்துள்ளனர்.


இதன்போது சந்தேகநபரை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.