இலங்கையில் மேலும் 263 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பேலியகொடை மீன் சந்தையை சேர்ந்தவர்களுடன் தொடர்புடைய 227 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்டிருந்த 36 பேருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,784 ஆக உயர்ந்துள்ளதுடன், சிகிட்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 3,966 ஆக பதிவாகியது.
$ads={2}