கொரோனா தொற்று காரணமாக சில பிரதேசங்களில் தபால் மற்றும் துணை தபால் நிலையங்களின் சேவைகளை மீள் அறிவிப்பு வரை இடை நிறுத்துவதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் தொற்றின் காரணமாக பல பிரதேசங்களிலும் மக்கள் தபால் மூலம் வரும் கடிதங்கள் மற்றும் பொதிகளைப் பெற்றுக்கொள்ள மறுப்பதனால் மற்றும் தபால் சேவைகளில் ஈடுபடுவோரின் பாதுகாப்பு கருதி இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
$ads={2}
அதன்படி, மேல் மாகாணம், காலி பிரதான தபால் நிலையம் மற்றும் அதன் உப நிலையங்கள், குருணாகல மாவட்டத்தின் குலியாபிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள தபால் நிலையங்களே இவ்வாறு சேவைகளை நிறுத்தியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் தபால் சேவைகளினூடாக வழங்கி வரும் மருத்துவ பொருட்களை தபால் நிலையங்கள் மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.