உப கொத்தணிகளை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டையும் முடக்க வேண்டும்! GMOA எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உப கொத்தணிகளை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டையும் முடக்க வேண்டும்! GMOA எச்சரிக்கை!


கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் அந்த வலயங்களை முடக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.


குறித்த சம்மேளனத்தின் செயலாளர் செனால் பெர்னாண்டோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.


கொரோனா தொற்று ஏற்படும் போது அந்தந்த வலயங்களை முடக்காது போனால் வைரஸ் தீவிரமாக தொற்றுவதை தடுக்க முடியாது போய் விடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


$ads={2}


இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,


ஏற்கனவே 13 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது. அத்துடன் 5 மாவட்டங்களில் உப கொத்தணி பரவல்கள் பதிவாகியுள்ளன.


இந்நிலையில், உப கொத்தணி பரவல்களை உடனடியாக கட்டுப்படுத்தாவிட்டால் முழு நாட்டையும் முடக்க வேண்டிய நிலை ஏற்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.


இதேவேளை உலக சுகாதார மையமும் நாட்டை முடக்காமல் வைரஸ் பரவும் பிரதேசங்களை கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளமையை சம்மேளன செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.